இந்தியாவில் உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படாமல் இருந்துவந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாள்களாகவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டுவருகின்றனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “எரிபொருள் விலை உயர்வைச் சமாளிக்க மத்திய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. இந்த நெருக்கடியான சூழலுக்கு பா.ஜ.க-தான் காரணம். உத்தரப்பிரதேசத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற பிறகு நாட்டுக்கு அவர்கள் கொடுத்த பரிசு இது. இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சி.பி.ஐ.. மற்றும் அமலாக்கத்துறையைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இந்தப் பொருளாதார பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான் ஆகிய இடங்களிலிருந்து நிலக்கரி வருகிறது. தற்போது இலங்கையைவிட இந்தியாவின் பொருளாதாரநிலை மோசமாக உள்ளது. நமது நாட்டை இலங்கையுடன் ஒப்பிட்டுப் பேசவில்லை. ஆனால், கடந்த இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 10 முறை உயர்த்தப்பட்டுள்ளது. பாஜக, மக்களின் குரலை அடக்க வேண்டாம்” என்றார்.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *