
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று மண்டல பொறுப்பாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) தேர்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து வரும் திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து போராட்டம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு என பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அதனுடன் எஸ்ஐஆர் திருத்தப் பணிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க திமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பு உதவி மையத்தையும் அமைத்துள்ளது.

