
திருச்சி: “எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவும் மனு தாக்கல் செய்துள்ளது. கபட நாடகத்தை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்.” என தமிழக மு.க.முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ இளைய மகன் திருமண விழா சோமரசம்பேட்டையில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர், கீதா ஜீவன், எம்பிக்கள் அ.ராசா, திருச்சி சிவா, துரை வைகோ உட்பட பலர் பங்கேற்றனர்.

