
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ரத்து செய்ய கோரி, மார்க்சிஸ்ட், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சிகள் தாக்கல் செய்த ரிட் மனுக்களுக்கு பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 27-ம் அறிவித்தது. இது அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுவதாக உள்ளது. எனவே, எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி திமுக சார்பில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

