புதுடெல்லி: கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் இருந்து இந்தியா தனது முதல் வகை கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இலக்குகளுக்கு எதிராக ஏவுகணை வெற்றிகரமாக செயல்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் இந்திய கடற்படைக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒடிசாவின் சண்டிபூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை ரேஞ்சிலிருந்து (ஐடிஆர்) நடத்தப்பட்ட இந்த சோதனையில் இந்திய கடற்படை சீக்கிங் ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்ட போது கப்பல் இலக்குகளுக்கு எதிராக ஏவுகணையின் திறன் நிரூபிக்கப்பட்டது. மிகவும் சரியாக ஒரு சிறிய கப்பல் இலக்கை நேரடியாக தாக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post ஒடிசா கடற்கரையில் சாதனை; கப்பல் எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை appeared first on Dinakaran.