Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: ஒப்பந்தப்படி படப்பிடிப்பை தொடங்காத பிரச்னை; ரூ.9 கோடி இழப்பீடு கோரி நடிகர் ஜெயம் ரவி வழக்கு: தயாரிப்பாளர் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

ஒப்பந்தப்படி படப்பிடிப்பை தொடங்காத பிரச்னை; ரூ.9 கோடி இழப்பீடு கோரி நடிகர் ஜெயம் ரவி வழக்கு: தயாரிப்பாளர் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

EDITOR

சென்னை: கோவையைச் சேர்ந்த பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம், 2 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்த நிலையில், ஒப்பந்தப்படி படப்பிடிப்பை தொடங்காததால் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி நடிகர் ஜெயம் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், 2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 80 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கிய போதும், இதுவரை படப்பிடிப்பை துவங்காததால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் போனது. படப்பிடிப்பை நடத்தாததால் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. அதனால் படத்திலிருந்து விலகினேன். இதுகுறித்து தயாரிப்பாளருக்கு தகவல் தெரிவித்த போது, முன் பணமாக தந்த ஆறு கோடி ரூபாயை திருப்பித் தரும்படி தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் இந்நிறுவனம் தயாரித்த சென்னை சிட்டி கேங்ஸ்டர் படத்தையும், தயாரிக்கும் வேறு படங்களையும் விற்கவும், வெளியிடவும் தடை விதிக்க வேண்டும். தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு 9 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும் படி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்த போது, முன்பணத்தை திருப்பி கொடுக்க நடிகர் ஜெயம் ரவி தயாராக உள்ளார். அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்த பின் அத்தொகையை கொடுப்பதாகக் கூறியபோதும், 7 நாட்களில் முன்பணத்தை திருப்பித்தர கேட்கின்றனர். அவரால் வேறு படங்களில் நடிக்க முடியவில்லை என்று ஜெயம் ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகை பாலன் வாதிட்டார்.

பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஒப்பந்தத்தை மீறி நடிகர் ஜெயம் ரவி பராசக்தி படத்தில் நடித்துள்ளார் எனத் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post ஒப்பந்தப்படி படப்பிடிப்பை தொடங்காத பிரச்னை; ரூ.9 கோடி இழப்பீடு கோரி நடிகர் ஜெயம் ரவி வழக்கு: தயாரிப்பாளர் பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • சாலை, குடிநீர் பணிகளை மழைக்கு முன்பு முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
  • மே.இ.தீவுகள் அணி வீரர்கள் மீது லாரா குற்றச்சாட்டு
  • 4-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும்: சொல்கிறார் இர்பான் பதான்
  • ஹாம்பர்க் டென்னிஸ் கால் இறுதியில் பல்கேரிய வீராங்கனை
  • சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆந்த்ரே ரஸல் ஓய்வு!
  • முருகப்பா ஹாக்கி அரை இறுதியில் ரயில்வேஸ், ஐஓசி மோதல்

You Might Also Like

தமிழ்நாடு அரசு அறிவிப்பு: 2026ல் ஹஜ் பயணத்திற்கு 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

July 8, 2025

திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட விபத்து குறித்து உயர் நிலை விசாரணை நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

July 13, 2025

சேலத்தில் கலைஞர் சிலை அவமதிப்பு அமைதியான தமிழகத்தை அமளி காடாக்கி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி: அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

July 15, 2025

நெல்லை மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க 2வது நாளாக போராட்டம்

July 17, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?