Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார், லாரி, அரசுப் பேருந்து என 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 4 பேர் உயிரிழப்பு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார், லாரி, அரசுப் பேருந்து என 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

EDITOR

கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார், லாரி, அரசுப் பேருந்து என 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசு பேருந்து அதன் பின்னால் வந்த சரக்கு வாகனம், அதன் பின்னால் அடுத்தடுத்து 2 கார்கள் ஒரு லாரி உள்ளிட்ட 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் மற்றும் அவர்களின் மகன் ஆகியோர் வந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். வாகனங்கள் மொத்திய விபத்தில் மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்து காரணமாக சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டனர். அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார், லாரி, அரசுப் பேருந்து என 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ‘மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது’ – அண்ணாமலை பேச்சு
  • பாகிஸ்தானை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது வங்கதேசம்: டி20 கிரிக்கெட்
  • பண்டைய கால பெண்கள் பாலுறவு பற்றி என்ன நினைத்தார்கள்?
  • ‘அனிமல்’ இயக்குநரிடம் மன்னிப்புக் கோரும் ‘சயாரா’ இயக்குநர்!
  • “கூட்டணி ஆட்சிதான்…” – பழனிசாமி பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் ரியாக்‌ஷன்
  • போட்டோஷூட்டுக்காக சங்கமித்த இந்திய கிரிக்கெட் அணி, மான்செஸ்டர் யுனைடெட்!

You Might Also Like

மதுரை ஆதீனத்திற்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது :காவல்துறை எதிர்ப்பு

July 16, 2025

கல்வியின் மூலம் சாதித்த திருநங்கை ஜென்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

June 22, 2025

வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்: 16 ஆயிரம் பேர் முன்பதிவு: போக்குவரத்து துறை தகவல்

July 16, 2025

சிவகங்கை எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம்: மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட்: 5 போலீசார் சிறையில் அடைப்பு

July 1, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?