Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: கடலூரில் ரயில் மோதி 3 மாணவர்கள் பலி கேட்டை மூடாமலே மூடியதாக தகவல் சொன்ன கேட் கீப்பர்: புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

கடலூரில் ரயில் மோதி 3 மாணவர்கள் பலி கேட்டை மூடாமலே மூடியதாக தகவல் சொன்ன கேட் கீப்பர்: புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்

EDITOR

சிதம்பரம்: கடலூரில் ரயில் மோதி 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில், கேட் கீப்பர் கேட்டை மூடாமலே மூடியதாக தகவல் சொன்னது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர் செம்மங்குப்பத்தில் கடந்த 8ம் தேதி பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து புலன் விசாரணை குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விபத்தின் முதல் ஆதாரமாக ஸ்டேஷன் மாஸ்டர், கேட் கீப்பர் ஆகியோர் சம்பவத்தின்போது நடத்திய வாய்ஸ் ரெக்கார்டர் பரிசோதிக்கப்பட்டது.

இதில் செம்மங்குப்பம் ரயில்வே கிராசிங் கேட் திறந்து இருந்ததற்கான ஆதாரங்களை இக்குழுவினர் கண்டறிந்த நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை மூடாமல் திறந்து வைத்திருந்தது புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது.  அதாவது, ரயில்வே கேட்டை மூடாமலேயே மூடிவிட்டதாக பிரைவேட் எண்ணை ஸ்டேஷன் மாஸ்டருக்கு கொடுத்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, விபத்துக்குபின் ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து கேட்டை மூடவில்லை என தெரிவித்தது ரயில்வேயின் தானியங்கி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

மூடியிருந்த கேட்டை பள்ளி வேன் டிரைவர் திறக்க சொன்னதாக பங்கஜ் சர்மா முதலில் கூறியிருந்த நிலையில், புலன் விசாரணையில் கேட் கீப்பர் பொய் சொல்லியிருப்பதும், அவரது அலட்சியமே இந்த கோர ரயில் விபத்துக்கு காரணம் என்பதும் வெளிப்படையாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், கடலூர் ரயில் விபத்து தொடர்பாக முதுநகர் ரயில் நிலை மேலாளர் அசோக்குமார் ஜோவோ, விபத்து நடந்த ரயிலின் கார்டு விக்ராந்த் சிங் மற்றும் ரயில் இன்ஜின் டிரைவர், உதவி டிரைவர் உள்ளிட்ட 4 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜராக திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் மூலம் சிதம்பரம் ரயில்வே போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

அதன்படி நேற்று காலை 4 பேரும் சிதம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் ஆஜராகினர். அவர்களை ரயில் நிலைய ஓய்வறைக்கு அழைத்துச் சென்ற ரயில்வே போலீசார், கதவுகள் அனைத்தும் மூடிய நிலையில் 4 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் ரயில் விபத்து குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி அவர்களின் வாக்குமூலத்தை சேகரித்ததாக தெரிகிறது.

The post கடலூரில் ரயில் மோதி 3 மாணவர்கள் பலி கேட்டை மூடாமலே மூடியதாக தகவல் சொன்ன கேட் கீப்பர்: புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
  • வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
  • பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு
  • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

You Might Also Like

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவிற்கு போலீசார் சம்மன்

June 24, 2025

மரக்காணம் இசிஆர் சாலையில் அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அதிரடியாக அகற்றிய வருவாய்த்துறை அதிகாரிகள்

June 25, 2025

பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அண்ணாமலையார் கோயிலில் ரூ.200 கோடியில் பெருந்திட்ட வரைவு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

July 17, 2025

கல்வியின் மூலம் சாதித்த திருநங்கை ஜென்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

June 22, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?