
பிரிஸ்பன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி20 ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்ட நிலையில், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி 20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியின் அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. திலக் வர்மா நீக்கப்பட்டு ரிங்கு சிங் சேர்க்கப்பட்டார்.

