Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: கல்வியை கொச்சைப்படுத்திய எடப்பாடிக்கு கண்டனம் தமிழகம் முழுவதும் கல்வி உரிமை இயக்கம்: திமுக மாணவர் அணி செயலாளர் பேட்டி
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

கல்வியை கொச்சைப்படுத்திய எடப்பாடிக்கு கண்டனம் தமிழகம் முழுவதும் கல்வி உரிமை இயக்கம்: திமுக மாணவர் அணி செயலாளர் பேட்டி

EDITOR

சென்னை: திமுக மாணவர் அணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி அளித்த பேட்டி: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரும் நிதியில் இருந்து கல்வி இயக்கங்கள் ஆரம்பிக்கக் கூடாது என தமிழர்களின் கல்வியை கொச்சைப்படுத்தும் எடப்பாடி பழனிசாமியை கண்டிக்கிறோம். திமுக மாணவர் அணி சார்பில் தொடர்ச்சியாக கல்வி உரிமைகள் இயக்கம் நடத்தப்படும்.

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரி நிறுவனங்கள் வாயிலாக தமிழ் மாணவர் மன்றம் அமைப்பது மட்டுமில்லாமல், இயங்கி வரும் மன்றத்தினை விரிவுபடுத்தி, உள்ளுக்குள் திராவிட இயக்கம், தமிழ் உணர்வு மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளை பேசும் பொருளாகி மாணவர்களிடையே கொண்டு செல்லப்படும்.

அதன் அடிப்படையில், அடுத்த வாரத்திலிருந்து ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தை முன்னெடுத்துள்ள முதல்வரின் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அனைத்து கல்லூரி வாயிலாக திமுக மாணவரணி சார்பில் ஒரு கொள்கை பிரசாரம் மேற்கொள்ளப்படும். இதில் இளைஞர்கள் சேர வேண்டும் என்பதற்காக கல்லூரி வளாகங்களுக்கு முன்பு மாணவரணி துண்டு அறிக்கைகளை வழங்கி திமுகவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* கோவையில் 14ம் தேதி ஆர்ப்பாட்டம்

திமுக மாணவர் அணிச் செயலாளர் இரா.ராஜீவ் காந்தி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கல்விக்காக திராவிட மாடல் அரசு எடுக்கும் முன்னெடுப்புகளை கொச்சைப்படுத்தும் விதமாக கோவையில் பேசியுள்ள எடப்பாடி பழனிசாமியை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் வரும் 14ம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில், கோவை, டாடாபாத், சிவானந்தா காலனியில் திமுக மாணவர் அணி செயலாளர் இரா.ராஜீவ் காந்தி தலைமையில் மாணவர் அணி மாநில துணைச் செயலாளர்கள் மன்னை சோழராஜன், சேலம் தமிழரசன், அதலை செந்தில்குமார், தமிழ் அமுதரசன், ஆனந்த், கோகுல், பூர்ண சங்கீதா சின்னமுத்து, வீரமணி, ராமகிருஷ்ணன் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

The post கல்வியை கொச்சைப்படுத்திய எடப்பாடிக்கு கண்டனம் தமிழகம் முழுவதும் கல்வி உரிமை இயக்கம்: திமுக மாணவர் அணி செயலாளர் பேட்டி appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • வைகோ மீது சாதிய முலாம் பூசுவதா: இளைஞரணி கண்டனம்
  • கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு
  • மகாராஷ்டிராவில் இஸ்லாம்பூர் பெயர் ஈஸ்வர்பூராக மாற்றம்
  • ரூ.3,200 கோடி மதுபான ஊழல் வழக்கில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்யா கைது
  • ஏகே – 203 ரக நவீன துப்பாக்கிகள் உ.பி. அமேதியில் தயாரிப்பு
  • உ.பி. மாநிலத்தில் சோதனையின் போது சங்கூர் பாபா டைரி சிக்கியது

You Might Also Like

தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள், ஆலைகள், ஐடி, நிறுவனங்களுக்கான மின்கட்டணம் இன்று முதல் ஒரு கிலோ வாட் ரூ.7.25லிருந்து ரூ.7.50 ஆக உயர்வு

July 1, 2025

சென்னையில் புதிதாக இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் ரூ.1000 பயண அட்டை செல்லும்

July 3, 2025

திருப்பதி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து : ஒன்றிய அரசு ரயில்வே துறையை அலட்சியமாக இயக்குவதாக குற்றச்சாட்டு

July 14, 2025

மாநில திட்டக்குழு தயாரித்துள்ள 4 முக்கிய அறிக்கைகள், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டன

July 7, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?