தருமபுரி: காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து நீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 16,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் குளிக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
The post காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை appeared first on Dinakaran.