
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி திமுக நகராட்சி தலைவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறும் நிலையில், கவுன்சிலர்கள் வந்த பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும், அதிமுக கவுன்சிலரை கடத்தியதாக அக்கட்சியின் எம்எல்ஏ அசோக்குமார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கிருஷ்ணகிரி நகராட்சியின் தலைவராக திமுகவை சேர்ந்த பரிதா நவாப் இருந்து வருகிறார். துணைத் தலைவராக திமுகவை சேர்ந்த சாவித்தரி கடலரசுமூர்த்தி உள்ளார். நகராட்சியை பொறுத்தவரை திமுக கவுன்சிலர்கள் 25 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 6 பேரும், காங்கிரஸ், பாஜக கவுன்சிலர்கள் தலா ஒருவரும் என மொத்தம் 33 பேர் உள்ளனர்.

