Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: கூடலூர் அரசு உண்டு உறைவிட பள்ளியில் 33 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

கூடலூர் அரசு உண்டு உறைவிட பள்ளியில் 33 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல்

EDITOR

*4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

கூடலூர் : கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு உண்டு உறைவிட நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை 3 மாணவிகளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து உடல்நிலை சரியில்லை என்று கூறிய மேலும் 30 மாணவ, மாணவிகளை சிகிச்சைக்காக பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அவர்களை, மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது 3 மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டிருப்பதும் 2 மாணவிகளுக்கு தொண்டையில் வலி உள்ளதும், 28 குழந்தைகளுக்கு சளி அதிகமாக உள்ளதையும் கண்டறிந்தனர். இதில், காய்ச்சல் அதிகமாக உள்ள 4 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீதம் உள்ள மாணவர்களை சோதனைக்கு பின் பள்ளிக்கு திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த கூடலூர் ஆர்டிஓ குணசேகரன், தாசில்தார் முத்துமாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘தற்போது மழைக்காலம் என்பதால் மாணவர்களுக்கு சளி தொற்று, தொண்டை வலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து உடல் நலம் பாதிப்புக்குள்ளான 33 மாணவ, மாணவிகளையும் அழைத்துக் கொண்டு ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றனர்.

இதில், 4 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மற்ற அனைவரும் நலமுடன் உள்ளனர்.இருப்பினும், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

இதற்காக மருத்துவ குழுவினர் அனைத்து குழந்தைகளையும் கண்காணித்து வருகின்றனர்’ என்றனர்.மொத்தமாக 33 பழங்குடியின பள்ளி மாணவ, மாணவியர் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post கூடலூர் அரசு உண்டு உறைவிட பள்ளியில் 33 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 27 உடல்கள் மீட்பு
  • காசியாபாத்தில் சைவ உணவு மட்டும் தற்காலிகமாக தயாரித்து வழங்கும் கேஎஃப்சி: காரணம் என்ன?
  • டெல்லியில் கணவரை காதலனுடன் இணைந்து கொன்ற மனைவி: சாட் மூலம் சிக்கியது எப்படி?
  • மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு
  • அனைத்தையும் விசாரிக்க அமலாக்கத் துறை சூப்பர் போலீஸ் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்
  • வியட்நாம் கடலோர பகுதியில் சுற்றுலா படகு கவிழ்ந்து 8 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி

You Might Also Like

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

July 1, 2025

ஹைட்ரஜன் எரிசக்தி கண்டிப்பாக வந்தே தீரும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி

July 8, 2025

ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் போரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி வி.பி.சிங்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமுக வலைதளப் பதிவு

June 25, 2025

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு

July 16, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?