
பெங்களூரு: பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலை, பலாத்கார, தீவிரவாத குற்றவாளிகள் டிவி பார்த்தவாறு செல்போனில் பேசுவது போன்ற வீடியோ ஆதாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாராவில் கடந்த 1997ம் ஆண்டு 138 ஏக்கர் பரப்பளவில் மத்திய சிறை கட்டப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோரும் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது சசிகலா சீருடை அணியாமல் ஷாப்பிங் சென்று வருவது போன்ற வீடியோவும், டிவி, தனி சமையலறை ஆகியவற்றுடன் சொகுசாக இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

