
சென்னை: கோயில் சொத்துகளை கபளீகரம் செய்ய திமுக ஏன் அவ்வளவு வேகம் காட்டுகிறது என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் கல்லூரி தொடங்க அனுமதிக்கும் மசோதாவை தாக்கல் செய்து தமிழக அரசு அவசர அவசரமாக நிறைவேற்றி உள்ளது.

