
கோவை: கோவை அருகே மக்களுக்கும், விளை நிலங்களுக்கும் சேதம் ஏற்படுத்தி வந்த ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறையினர் இன்று அதிகாலை கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார கிராமப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒற்றைக் காட்டு யானை மக்களுக்கும் விளை நிலங்களுக்கும் சேதம் ஏற்படுத்தி வந்தது.

