Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு..!!
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு..!!

EDITOR

சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தெலுங்கானாவில் உள்ள மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா.  சூதாட்ட செயலியை விதிகளை மீறி விளம்பரப்படுத்திய தெலுங்கு நடிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்கள் மீது ஐதராபாத் போலீசார் புகார் அளித்துள்ளார். அதில், “தன்னுடைய காலனியைச் சேர்ந்த இளைஞர்களிடம் பேசும்போது, சினிமா பிரபலங்கள், சமூக வலைத்தள பிரபலங்கள் ஆகியோர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தும் சூதாட்ட செயலிகளில் பணத்தை முதலீடு செய்து இருக்கிறார்கள். இவர்கள் மீது பொது சூதாட்ட சட்டம் 1867ன் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

குறிப்பாக விசாகப்பட்டினம், சூர்யாபேட், சைபராபாத், மியாபூர், பஞ்சகுட்டா ஆகிய காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த சூதாட்ட செயலிகளில் பலரும் பணத்தை இழந்துள்ளனர். சமூக வலைதளங்களில் பிரபலங்கள் இதுபோன்ற சூதாட்ட செயலிகளை விதிகளை மீறி விளம்பரப்படுத்துகிறர்கள். இதனால் பணத்தேவை உடையவர்கள் இதுபோன்ற சூதாட்ட செயலிகளில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றப்படுகிறார்கள். இதை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள் பெரிய அளவில் தொகையை பெற்றுக்கொள்கிறார்கள். எனவே சட்ட விரோதமாக இந்த செயலிகளை பிரபலப்படுத்தும் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில் சூதாட்ட செயலியை விதிகளை மீறி விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவர்கொண்டா, ராணா டகுபதி, நிதி அகர்வால் உள்ளிட்ட 29 பேர் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

The post சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • “பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா?” – திருவள்ளூர் சம்பவத்தில் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
  • “திமுக கூட்டணியில் எந்த கட்சியும் ஆட்சியில் பங்கு குறித்து பேசவில்லை” – நவாஸ்கனி எம்.பி
  • திருவள்ளூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தமிழிசை சரமாரி கேள்வி
  • ரஷ்யாவை தனிமைப்படுத்த இந்தியா, சீனாவுக்கு நேட்டோ தலைவர் மிரட்டல் – விளைவுகள் என்ன?
  • இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் கே.என்.நேரு
  • சென்னையில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள், பெண் நீதிபதிகள்: தமிழ்நாட்டை பாராட்டிய தலைமை நீதிபதி ஸ்ரீராம்!

You Might Also Like

கீழடி அகழாய்வு அறிக்கையை சிதைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

July 17, 2025

மாநில திட்டக்குழு தயாரித்துள்ள 4 முக்கிய அறிக்கைகள், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டன

July 7, 2025

காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் காவல் அதிகாரிகள், ஆளிநர்களிடமிருந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் உத்தரவு

June 24, 2025

ரியல் எஸ்டேட் நிறுவன விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு: தமிழ்நாடு அரசு

July 6, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?