
கோழிக்கோடு: சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தில் பிரதமர் தலையிடக் கோரி மிகப் பெரிய கையெழுத்து பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக பாஜக பொதுச் செயலாளர் ரமேஷ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகமான ஏகேஜி மையத்துக்கு தொடர்பு உள்ளது. சபரிமலை கோயிலின் கதவில் இருந்து தங்கம் திருடப்பட்ட விவகாரம் ஒரு நபருடன் மட்டும் தொடர்புடையதாக இருக்க முடியாது எனவும், இதில் சர்வதேச அளவில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக கேரள உயர் நீதிமன்றமே தெரிவித்துள்ளது.

