
கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று (அக்.20) நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி, நியூஸிலாந்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. முதல் போட்டி மழையால் முழுதும் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர், தவறாக முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தார். இங்கிலாந்து போட்டு சாத்து சாத்து என்று சாத்தி எடுத்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்களைக் குவிக்க, நியூஸிலாந்து அணி 18 ஓவர்களில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 65 ரன்களில் படுதோல்வி கண்டது.

