Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: சிறுமுகை அருகே குட்டையில் பதுங்கியிருந்த 7 அடி நீள ராட்சத முதலை: வனத்துறையினர் மீட்டு பவானிசாகர் அணையில் விடுவிப்பு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

சிறுமுகை அருகே குட்டையில் பதுங்கியிருந்த 7 அடி நீள ராட்சத முதலை: வனத்துறையினர் மீட்டு பவானிசாகர் அணையில் விடுவிப்பு

EDITOR


மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே குட்டையில் பதுங்கியிருந்த 7 அடி நீளம் உள்ள முதலையை வனத்துறையினர் 6 மணி நேரம் போராடி மீட்டு பவானிசாகர் அணைப்பகுதியில் விடுவித்தனர். மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பட்டக்காரனூர் பகுதியில் குட்டை ஒன்று உள்ளது. மழைக்காலங்களில் ஏழு எருமை பள்ளத்திற்கு வரும் நீர் இந்த குட்டைக்கு செல்கிறது.இந்நிலையில் இந்த குட்டையில் முதலையின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் சிலநாட்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர் முதலையின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் குட்டையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். நேற்று காலை இந்த குட்டையில் முதலையின் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.

தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் என்.டபிள்யூ.சி.டி குழுவினர் இணைந்து முதலில் மோட்டார்கள் மூலமாக குட்டையில் இருந்த நீர் முழுவதையும் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.ஓரளவிற்கு குட்டையில் இருந்த நீர் வெளியேற்றப்பட்ட பின்னர் அங்கு பதுங்கி இருந்த முதலை அருகில் இருந்த புதரில் சென்று மறைந்தது. 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சுமார் 7 அடி நீளமுள்ள ஆண் முதலையை வனத்துறையினர் மற்றும் என்.டபிள்யூ.சி.டி குழுவினர் பத்திரமாக பிடித்தனர்.பின்னர், கயிறு மூலமாக அதன் வாய் பகுதியை முழுவதுமாக கட்டி வாகனத்தில் ஏற்றினர்.

தொடர்ந்து குட்டையில் பிடிபட்ட முதலையை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் சிறுமுகை வனச்சரக எல்லைக்குட்பட்ட பெத்திக்குட்டை பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.நீரை கண்ட உற்சாகத்தில் துள்ளி குதித்து முதலை நீர்த்தேக்க பகுதிக்குள் சென்று மறைந்தது. பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வந்த குட்டையில் ராட்சத முதலை பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post சிறுமுகை அருகே குட்டையில் பதுங்கியிருந்த 7 அடி நீள ராட்சத முதலை: வனத்துறையினர் மீட்டு பவானிசாகர் அணையில் விடுவிப்பு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • சாலை, குடிநீர் பணிகளை மழைக்கு முன்பு முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
  • மே.இ.தீவுகள் அணி வீரர்கள் மீது லாரா குற்றச்சாட்டு
  • 4-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும்: சொல்கிறார் இர்பான் பதான்
  • ஹாம்பர்க் டென்னிஸ் கால் இறுதியில் பல்கேரிய வீராங்கனை
  • சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆந்த்ரே ரஸல் ஓய்வு!
  • முருகப்பா ஹாக்கி அரை இறுதியில் ரயில்வேஸ், ஐஓசி மோதல்

You Might Also Like

ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

June 20, 2025

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஜூலை 28ல் உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

July 16, 2025

நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் நடைபெறும்; திட்ட பணிகளை அலுவலர்கள் தினமும் களஆய்வு செய்ய வேண்டும்: ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு அதிரடி உத்தரவு

July 12, 2025

தமிழ்நாடு முழுவதும் சாலை மற்றும் மேம்பால பணிகளுக்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு

July 7, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?