Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: சென்னை மணலி-சடையங்குப்பம் பகுதியில் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஆய்வு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

சென்னை மணலி-சடையங்குப்பம் பகுதியில் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

EDITOR

சென்னை: சென்னை மணலி-சடையங்குப்பம் பகுதியில் கூடுதல் தலைமை செயலாளர்/ தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்குவதில் முக்கிய துணைமின் நிலையமான மணலி 400/230–110 கி.வோ. வலிம காப்பு துணை மின்நிலையம் மற்றும் அதிஉயர் மின்னழுத்த கோபுரங்களில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்பு, மின் பரிமாற்ற முறைகள், அதிஉயர்மின் கோபுரங்களின் விரிவான கள நிலவரம் மற்றும் தடையற்ற மின்சாரம் வழங்குவதில் மின் கட்டமைப்பில் உள்ள சவால்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து நேரில் சென்று மதிப்பாய்வு செய்தார்.

ஆய்வின் போது, களக் குழு, அதிஉயர் மின்னழுத்தப்பாதைகளை பராமரிப்பதில் உள்ள சவால்கள், சிக்கல்கள் மற்றும் எதிர்பாராவண்ணம் மின்தொடரமைப்பு பாதைகளில் ஏற்படும் இணைப்பு மின்கம்பிகள் துண்டிப்புகளை கட்டுப்படுத்தும் சிக்கலான செயல்முறைகளைப் பற்றி விரிவாக கேட்டரிந்தார். கள குழுக்கள் சமீபத்தில் இரண்டு கோபுரங்களில் அதிக ஆபத்துள்ள, உயர் மின்னழுத்த பராமரிப்பு பணி மற்றும் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்தது. இரண்டு டவர்களில் பணியாற்றிய பிறகு, பணியாளர்கள் அவசர நிலைகளில் கம்பிகள் முறிவடையும் சூழ்நிலைகளில், அவற்றை மீளமைக்கும் பணியின் சவால்கள், நுட்ப விவரங்கள் மற்றும் கடினத்தன்மைகள் குறித்து நேரில் விளக்கம் அளித்தனர்.

அவசர நிலைகளை நிர்வகிப்பதில் பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்நுட்ப புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் வகையில், அவர்களின் தொழில்நுட்ப திறமையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிய ஜெ. ராதாகிருஷ்ணன், “பொதுமக்களுக்கு தடையில்லா மின் விநியோகம் உறுதிப்படுத்த, மின்தடைகள் ஏற்படாத வகையில் தடுப்புச் செயல்முறைகள் மற்றும் முன்கூட்டிய பராமரிப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, தண்டையார்பேட்டை கோட்ட செயற்பொறியாளர் எம்.என். ஜெகதீஷ்துமார், மணலி 400 கி.வோ. செயற்பொறியாளர் (இயக்கம்) உஜ்ஜயந்தி, பராமரிப்பு உதவி செயற் பொறியாளர் வெங்கடராமன் மற்றும் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு (P&C) பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.

The post சென்னை மணலி-சடையங்குப்பம் பகுதியில் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஆய்வு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
  • வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
  • பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு
  • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

You Might Also Like

ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

June 24, 2025

அருப்புக்கோட்டை அருகே லாரி மீது வேன் மோதி 3 பேர் உயிரிழப்பு

July 10, 2025

தமிழகத்தில் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

July 10, 2025

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திடீர் புகைமூட்டம்: அலறியடித்து வெளியேறிய நோயாளிகள்

July 15, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?