சென்னை: சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நாளை தொடக்கப்பட உள்ளது. அக்டோபர் மாதம் வரை 15 மண்டலங்களிலும் உள்ள ஒவ்வொரு வார்டிலும் தலா 2 முகாம்கள் நடைபெறும். ஒவ்வொரு வார்டிலும் தலா 2 முகாம்கள் வீதம் 200 வார்டுகளிலும் மொத்தம் 400 முகாம்கள் அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக ஆகஸ்டு 14-ந்தேதி வரை 109 வார்டுகளில் முகாம் நடைபெற உள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 6 வார்டுகள் வீதம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெறும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
The post சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நாளை தொடக்கம்!! appeared first on Dinakaran.