
புதுடெல்லி: ஜிஎஸ்டி குறைப்பின் பலன் நுகர்வோரை சென்றடைந்துள்ளதாகவும், 54 தினசரி பயன்பாட்டு பொருட்களின் நுகர்வை அரசு கண்காணித்து வருவதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மத்திய அரசு கொண்டு வந்த மறுசீரமைப்பு செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்துள்ளது. 5%, 12%, 18%, 28% என 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி, 5%, 18% என 2 அடுக்குகளாக் குறைக்கப்பட்டன. ஜிஎஸ்டி மறு சீரமைப்பால், மக்கள் தினசரி பயன்படுத்தும் நுகர்பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

