சென்னை: டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்களின் விலையை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வினால் அரசுக்கு ஆண்டுக்கு பல கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளது என்று தெரியவருகிறது. இந்த விலை உயர்வினால் குடிமகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.