
புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடு மோசம் அடைந்துள்ள நிலையில் 6 அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் 24 மணி நேரத்தில் 60% அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
டெல்லி தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கு, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதும் ஒரு காரணமாக உள்ளது.

