
புதுடெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பு சதிகாரர்களை நீதியின் முன் நிறுத்துவோம் என பூடானில் பிரதமர் நரேந்திர மோடிஉறுதிபட தெரிவித்துள்ளார்.
பூடான் அரசு சார்பில் தலைநகர் திம்பு நகரில் உலக அமைதி பிரார்த்தனை திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும் அந்நாட்டின் 4-வது மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக்கின் 70-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று பூடான் புறப்பட்டுச் சென்றார். உலக அமைதி பிரார்த்தனை திருவிழாவில் நேற்று பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: பூடானின் 4-வது மன்னர் வாங்சுக், பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் பூடானுக்கு மட்டுமல்ல, உலக அமைதியில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நாள். இந்தியா- பூடான் இடையிலான கலாச்சார, ஆன்மிக மற்றும் வளர்ச்சி கூட்டுறவு பல நூற்றாண்டுகள் பழமையானது. இரு நாடுகளிடையேயான உறவு தொடர்ந்து வலுப்பெறும்.

