சென்னை: தமிழகத்தில் நிலவிவரும் வறண்ட வானிலை காரணமாக நாளை முதல் இரண்டு நாட்களுக்கு இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்துக்கு பிறகு தற்போது பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதற்கிடையே வட மாநிலங்களில் இருந்து வீசும் குளிர் காற்றின் காரணமாக தமிழகத்தில் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவும் நீடித்து வருகிறது.
குறிப்பிட்ட சில இடங்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சமவெளிப்பகுதிகளில் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இரண்ட நாட்களாக தமிழகத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையி்ல் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, இன்று முதல் 23ம் தேதி வரை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.
The post தமிழ்நாட்டில் நாளை முதல் 2 நாட்களுக்கு 4 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகரிக்கும் appeared first on Dinakaran.