
புதுடெல்லி: தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் சமண மதத்தின் வரலாற்று முக்கியத்துவம் சார்ந்த பங்களிப்பு உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற சமண மத ஆச்சார்யர் ஹன்ஸ்ரத்னா சூரிஷ்வர்ஜி மகாராஜ்-ன் எட்டாவது 180 உபவாச பர்ண விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், "உலகின் பழமையான மதங்களில் ஒன்றான சமண மதத்தின் போதனைகளான அஹிம்சை (வன்முறையின்மை), சத்தியம் (உண்மை), அபரிகிரஹா (சொத்துரிமையின்மை), அனேகாந்தவாத (உண்மைக்கான பல்வேறு அணுகுமுறைகள்) ஆகியவை இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

