மும்பை: இந்திய அணியில் தரமான பேட்ஸ்மேன்கள் இருந்தும் லார்ட்ஸ் டெஸ்ட்டில் இலக்கை எட்ட முடியாமல் போனது ஏமாற்றம் தான் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 22 ரன்களில் இந்தியா தோல்வியடைந்தது. ஜடேஜா, பும்ரா, சிராஜ் ஆகியோர் இறுதிவரை போராடியும் வெற்றிக்கோட்டை கடக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசம். இந்நிலையில், இந்திய பேட்ஸ்மேன்கள் குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.