Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: திருச்சி அருகே பஸ் நிலையத்தில் ரூ.1.12 கோடியுடன் சிக்கிய வியாபாரி: வருமான வரித்துறை விசாரணை
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

திருச்சி அருகே பஸ் நிலையத்தில் ரூ.1.12 கோடியுடன் சிக்கிய வியாபாரி: வருமான வரித்துறை விசாரணை

EDITOR

தொட்டியம்: திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது தொட்டியம் காவல் நிலையம் எதிரே பேருந்து நிறுத்ததில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் இரண்டு பேக்குகளுடன் ஒருவர் நின்றிருந்தார். போலீசாரை பார்த்த உடன் அந்த வாலிபர் திருதிருவென்று முழித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. உடனடியாக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று சோதனையிட்டதில் அந்த பையில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 48 ஆயிரத்து 200 இருந்தது. அவர், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா கன்னிகா காவேரி தெருவை சேர்ந்த கோபிநாத் (52) என்பதும் டியூப் மற்றும் பிளைவூட் கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது.

இதுபற்றி திருச்சி வருமான வரித்துறையினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து திருச்சியில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் வந்து கோபிநாத்தை பணத்துடன் திருச்சிக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் கணக்கில் வராத பணமா அல்லது ஹவாலா பணமா என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post திருச்சி அருகே பஸ் நிலையத்தில் ரூ.1.12 கோடியுடன் சிக்கிய வியாபாரி: வருமான வரித்துறை விசாரணை appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • யார் இந்த மு.க.முத்து? – எம்ஜிஆருக்கு போட்டி முதல் தந்தையுடனான பிரிவு வரை!
  • இந்திக்கு வால் பிடிப்பதுதான் திராவிட மாடல் அரசின் கொள்கையா? – அன்புமணி காட்டம்
  • இந்தியா – பாக். மோதலின்போது 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்: டொனால்ட் ட்ரம்ப்
  • இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் புதுமை: 2 மருத்துவமனைகளுக்கு இடையே இணை மாற்ற அறுவை சிகிச்சை
  • நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 பேரின் சிறுநீரகம் விற்கப்பட்டது: விசாரணையில் அம்பலம்
  • திருவாரூரில் நாளொன்றுக்கு 1000 நெல் மூட்டை கொள்முதல்..!!

You Might Also Like

கடலூரில் ரயில் மோதி 3 மாணவர்கள் பலி கேட்டை மூடாமலே மூடியதாக தகவல் சொன்ன கேட் கீப்பர்: புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்

July 12, 2025

கள்’ மதுவை உணவு என தவறுதலாக கூறும் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: மருத்துவத் துறைக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடிதம்

July 15, 2025

கூடலூர் நகரில் உண்டு உறைவிடப் பள்ளி குழந்தைகள் 15 பேருக்கு வாந்தி, மயக்கம்

July 17, 2025

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்வு!!

July 3, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?