மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வழங்கிய மதநல்லிணக்க துண்டுப் பிரசுரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில் போலீஸாருக்கும் அந்த அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் மதநல்லிணக்கம் மற்றும் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்க தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் சங்கம் ஆகிய அமைப்பினர் முடிவெடுத்தனர். இது தொடர்பாக எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கிளைச் செயலாளர் தியாகராஜன், திருப்பரங்குன்றம் போலீஸில் நேற்று அனுமதி கோரி மனு அளித்தார்.