சென்னை: திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் கிடைத்து 5 நாட்கள் ஆகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருவர் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிசிடிவி காட்சிகள் கிடைத்து 5 நாட்கள் ஆகியும், இன்னும் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை, யோசித்தால் அனைவருக்கும் வேதனையாக இருக்கிறது.