
தூத்துக்குடி: நடப்பாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 19 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தி நடந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன.
இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.

