
புதுடெல்லி: பெங்களூருவில் உள்ள மீகோ கார்டோபியா சர்க்யூட்டில் எஃப்எம்எஸ்சிஐ இந்தியன் ரோடாக்ஸ் மேக்ஸ் தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதில் டெல்லி பப்ளிக் பள்ளியில் படித்து வரும் 9 வயது மாணவியான அர்ஷி குப்தா சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் தேசிய கார்ட்டிங்கில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை அர்ஷி படைத்தார்.

