
பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என சிபிஐ (எம்எல்) லிபரேஷன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா உறுதிப்படுத்தினார்.
பாட்னாவில் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய தீபங்கர் பட்டாச்சார்யா, “விரைவில் முதல்வர் வேட்பாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இண்டியா கூட்டணி பெரும்பான்மையைப் பெறும்போது, தேஜஸ்வி யாதவ் முதல்வராக வருவார் என்பதை மாநில மக்கள் அறிவார்கள். அதில் எந்த குழப்பமும் இல்லை. நாளை எங்கள் கூட்டணியின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவரது பெயர் அறிவிக்கப்படும் என்று நம்புகிறேன்.

