Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: தைலம், கற்பூரம் கலந்து மூக்கில் தேய்த்ததால் 8 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு பலி
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

தைலம், கற்பூரம் கலந்து மூக்கில் தேய்த்ததால் 8 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு பலி

EDITOR

சென்னை: தைலம் மற்றும் கற்பூரம் கலந்து உடலில் தேய்த்ததால் 8 மாத குழந்தை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. சென்னை அபிராமபுரம் ஆர்.கே.சாலை வல்லவன் நகரை சேர்ந்தவர் தேவநாதன்(28). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி யாழினி என்ற 8 மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த 13ம் ேததி குழந்தைக்கு அதிகளவில் சளி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நாட்டு வைத்தியம் என்று தைலத்துடன் கற்பூரம் கலந்து குழந்தையின் மார்பு, மூக்கில் தேய்த்துள்ளனர்.

சிறிது நேரத்தில் குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே தேவநாதன் தனது குழந்தையை மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று உயிரிழந்தது. பின்னர் சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீசார் குழந்தையின் தந்தை தேவநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post தைலம், கற்பூரம் கலந்து மூக்கில் தேய்த்ததால் 8 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு பலி appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ​திருக்​கழுக்​குன்​றம் அருகே நெல் கிடங்கு அமைக்க அனுமதி தருமா அரசு? – விவசாயிகள் எதிர்பார்ப்பு
  • ‘வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்’ – காமராஜர் சர்ச்சையில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
  • வலுக்கும் ‘ஆட்சியில் பங்கு’ அழுத்தம் – திமுக கூட்டணியிலும் வெடிக்கும் பிரளயம்!
  • பாட புத்தகங்களில் மாற்றம் செய்து மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்சிஇஆர்டி – வைகோ கண்டனம்
  • இந்தியாவில் அமெரிக்கா விற்க நினைக்கும் ‘அசைவ பால்’ என்றால் என்ன?
  • நானியுடன் இணையும் மோகன்பாபு!

You Might Also Like

பா.ம.க. எந்த கூட்டணியில் சேருகிறதோ அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும்: ராமதாஸ் பேட்டி

July 11, 2025

வரும் 10-ம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கு சிறப்பு அனுமதி

July 8, 2025

பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 65 புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.40.50 லட்சம் பரிசுத்தொகை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

July 17, 2025

ஒசூர் மேம்பாலத்தின் இணைப்பு விலகியது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

June 22, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?