கோவை: ‘தமிழகத்தில் 2026 தேர்தலில் திமுக வீழ்த்தப்பட்டு, பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்’ என்று கோவையில் நம்பிக்கை தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுசீரமைப்பு முதல் நிதி பகிர்வு வரை பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார்.
கோவை பீளமேடு பகுதியில் பாஜக மாநகர் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா இன்று நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்து கொடி ஏற்றி, பசுவுக்கு உணவளித்து, மரக்கன்றுகளை நட்டு வைத்து புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கட்டப்பட்ட புதிய பாஜக அலுவலகங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார்.