
கனமழையால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் ஒரேநாளில் 6 அடி உயர்ந்தது. நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு, கேரள பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழக கேரள எல்லையில் கனமழை பெய்து வருவதால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் 2,748 கனஅடியாக இருந்த நீர்வரத்து இரவு 11 மணிக்கு 40 ஆயிரத்து 733 கனஅடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம் 132 அடியில் இருந்து 138 அடியாக உயர்ந்தது.

