Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 2 நுழைவு வாயில் பகுதியில் அலங்கார வளைவுகள்: கண்காணிப்பு கேமராக்களுடன் அமைகிறது
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 2 நுழைவு வாயில் பகுதியில் அலங்கார வளைவுகள்: கண்காணிப்பு கேமராக்களுடன் அமைகிறது

EDITOR


நாகர்கோவில்: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள 2 நுழைவு வாயில் பகுதியிலும் அலங்கார வளைவுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் முனைய விரிவாக்க திட்டம் கடந்த 2023ம் ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடந்து வருகிறது. முனைய விரிவாக்க திட்டத்தில் வாகன பார்க்கிங், பயணிகளுக்கான கழிவறை, குடிநீர் வசதிகள், தங்கும் அறைகள், பஸ் நிறுத்தம், அலங்கார வளைவுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன. இந்த அலங்கார வளைவுகள் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய 2 நுழைவு வாயில் பகுதியிலும் அமைக்கப்பட உள்ளது. அலங்கார நுழைவு வாயிலுக்கான பணிகள் தற்போது நடக்கின்றன.

கோட்டார் கம்பளம் சந்திப்பில் ஒரு நுழைவு வாயில் அமைகிறது. மற்றொரு நுழைவு வாயில் கன்னியாகுமரி – நாகர்கோவில் சாலையில் இருந்து ரயில் நிலையத்துக்கு வரும் சாலையின் தொடக்கத்தில் அமைக்கப்படுகிறது. இந்த இரு நுழைவு வாயில்களில் அமைக்கப்படும் அலங்கார வளைவுகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. மின் விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட உள்ளன. முனைய விரிவாக்க பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். இது தவிர ரயில்கள் பராமரிக்க தேவையான பிட்லைன்கள், ஸ்டேபிளிங் லைன்கள் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன.

இதே போல் கூடுதலாக 4 மற்றும் 5 பிளாட்பாரங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. ரயில் நிலைய முனைய பணிகள் மற்றும் விரிவாக்க பணிகள் காரணமாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வர வேண்டிய புதிய ரயில்கள் தள்ளி கொண்டே போகிறது. இந்த பணிகள் ஓரளவு முடிந்தால் தான் புதிய ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பாக இருக்கும் என பயணிகள் கூறுகிறார்கள்.

The post நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 2 நுழைவு வாயில் பகுதியில் அலங்கார வளைவுகள்: கண்காணிப்பு கேமராக்களுடன் அமைகிறது appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • 30 நாளில் 2.50 கோடி உறுப்பினர்களை சேர்க்க திமுக மாவட்ட செயலாளர்களிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தகவல்
  • பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜேக் கூட்டமைப்பினர் மறியல் போராட்டம்
  • சாலை, குடிநீர் பணிகளை மழைக்கு முன்பு முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
  • மே.இ.தீவுகள் அணி வீரர்கள் மீது லாரா குற்றச்சாட்டு
  • 4-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும்: சொல்கிறார் இர்பான் பதான்

You Might Also Like

குமுளியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை தேனி எம்பி ஆய்வு

July 1, 2025

தேர்தல் நிதிக்காக அம்பானியின் கடன் தள்ளுபடி: மாணிக்கம் தாகூர் எம்பி புகார்

July 5, 2025

சென்னையில் விமான நிலையத்தில் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூனில் பயணிகள், விமானங்கள் வருகை, புறப்பாடு குறைந்தது

July 8, 2025

தூத்துக்குடி அருகே பரபரப்பு ஆசிரியர்கள் தரக்குறைவாக பேசியதால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: ஹெச்எம் உள்பட 4 பேர் அதிரடி சஸ்பெண்ட்

June 24, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?