புதுடெல்லி: நாட்டில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள் உட்பட அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், புதிதாக பொதுவான ஓய்வூதிய திட்டத்தை (யுனிவர்சல் பென்சன் ஸ்கீம்) கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டில் தற்போது அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டங்கள் உள்ளன. அதேபோல் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடல் பென்ஷன் யோஜ்னா திட்டம் அமலில் உள்ளது. இதில் சேர்ந்து பணத்தை முதலீடு செய்து 60 வயதை பூர்த்தி செய்பவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 முதல் 1,500 வரை பென்ஷன் வழங்கப்படுகிறது. மேலும், நடைபாதை வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள், வேலையாட்கள் போன்றவர்கள் பயன்பெற பிரதான் மந்திரி யோகி மந்தன் யோஜ்னா (பிஎம்-எஸ்ஒய்எம்) ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது.