Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: படத்தின் வெளிநாட்டு உரிமை தருவதாக கூறி ரூ.1.90 கோடி மோசடி செய்ததாக நடிகர் நிவின் பாலி மீது புகார்: போலீசார் வழக்குப்பதிவு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

படத்தின் வெளிநாட்டு உரிமை தருவதாக கூறி ரூ.1.90 கோடி மோசடி செய்ததாக நடிகர் நிவின் பாலி மீது புகார்: போலீசார் வழக்குப்பதிவு

EDITOR

திருவனந்தபுரம்: பட வெளியீட்டு உரிமை தருவதாக கூறி ரூ. 1.90 கோடி மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி, டைரக்டர் எப்ரிட் ஷைன் ஆகியோர் மீது எர்ணாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் மகாவீர்யர் என்ற படம் வெளியானது. இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளரான ஷம்நாஸ் என்பவர் நடிகர் நிவின் பாலி மற்றும் டைரக்டர் எப்ரிட் ஷைன் ஆகியோருக்கு எதிராக வைக்கம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டிருந்த விவரம் வருமாறு: ஆக்ஷன் ஹீரோ பிஜு 2 என்ற படத்தின் வெளிநாட்டு உரிமைக்காக நான் ரூ.1.90 கோடி பணம் கொடுத்தேன். ஆனால் எனக்குத் தெரியாமல் படத்தின் உரிமையை நடிகர் நிவின் பாலியும், டைரக்டர் எப்ரிட் ஷைனும் சேர்ந்து வேறு ஒருவருக்கு ரூ. 5 கோடிக்கு விற்று விட்டனர்.எனவே இது தொடர்பாக இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் நிவின் பாலி மற்றும் டைரக்டர் எப்ரிட் ஷைன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய தலயோலப்பரம்பு போலீசுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இருவர் மீதும் தலயோலப்பரம்பு போலீசார் 406, 420 மற்றும் 34 ஆகிய ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தனக்கு எதிரான புகாரில் எந்த உண்மையும் இல்லை என்றும், வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும் நடிகர் நிவின் பாலி கூறியுள்ளார்.

The post படத்தின் வெளிநாட்டு உரிமை தருவதாக கூறி ரூ.1.90 கோடி மோசடி செய்ததாக நடிகர் நிவின் பாலி மீது புகார்: போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • சாலை, குடிநீர் பணிகளை மழைக்கு முன்பு முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
  • மே.இ.தீவுகள் அணி வீரர்கள் மீது லாரா குற்றச்சாட்டு
  • 4-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும்: சொல்கிறார் இர்பான் பதான்
  • ஹாம்பர்க் டென்னிஸ் கால் இறுதியில் பல்கேரிய வீராங்கனை
  • சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆந்த்ரே ரஸல் ஓய்வு!
  • முருகப்பா ஹாக்கி அரை இறுதியில் ரயில்வேஸ், ஐஓசி மோதல்

You Might Also Like

இரு மதத்தினரிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பேச்சு முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு: திங்கட்கிழமை விசாரணை

July 10, 2025

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நடத்த இடைக்காலத் தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை

June 18, 2025

திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட விபத்து குறித்து உயர் நிலை விசாரணை நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

July 13, 2025

முகமது ஹாஷிம் சாஹிப் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

July 5, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?