சென்னை: புகார் கொடுத்தவரையே கடுமையாக தாக்கி விவசாய பயிர்களை அழித்த எஸ்.ஐ. முத்துக்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே வடமாம்பாக்கத்தில் நிலப் பிரச்சனை தொடர்பாக திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்ற எஸ்.ஐ. முத்துக்குமார், தனது கணவரை தாக்கியதுடன் பயிர்களை அழித்ததாக கனகவள்ளி மனு தாக்கல் செய்தார். பாதிக்கப்பட்ட கனகவள்ளிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.
The post பயிர்களை அழித்த எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.