சென்னை: பழம்பெரும் நடிகை சரோஜாதேவி மறைவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திரையுலகின் மிக மூத்த கலைஞர் சரோஜாதேவி மறைந்தது அறிந்து வருத்தமுற்றேன். பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, தான் ஏற்று நடித்த பாத்திரங்கள் மூலம் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளார். அவருடைய மறைவு கலையுலகிற்கு பேரிழப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
The post பழம்பெரும் நடிகை சரோஜாதேவி மறைவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி இரங்கல்!! appeared first on Dinakaran.