Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: பாக்கு தோட்டத்திற்குள் புகுந்து உணவு தேடிய காட்டு யானை: கிராம மக்கள் அச்சம்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

பாக்கு தோட்டத்திற்குள் புகுந்து உணவு தேடிய காட்டு யானை: கிராம மக்கள் அச்சம்

EDITOR

கோவை, ஜூலை 10: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு யானைகள் அடிக்கடி, உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விடுகின்றன. இதனிடையே, கடந்த சில நாட்களாக கெம்பனூர், ஓணாப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை ஆண் காட்டு யானை, குடியிருப்பு பகுதிகள் நிறைந்த பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக சுற்றித்திரிந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய அந்த ஆண் காட்டு யானை, ஓணாப்பாளையம் கிராமத்திற்குள் புகுந்தது. அப்பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்திற்குள் நுழைந்த அந்த யானை, உணவு தேடி சுற்றியது. இந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று, காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். தோட்டத்து வீடுகளில் ஆட்கள் வசித்து வரும் நிலையில் காட்டு யானை அடிக்கடி நுழைந்து விளைபொருட்களையும், ரேசன் அரிசி, கால்நடை தீவனங்கள் உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களுக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பாக்கு தோட்டத்திற்குள் புகுந்து உணவு தேடிய காட்டு யானை: கிராம மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • லாஸ் வேகாஸ் செஸ் கிராண்ட்ஸ்லாம்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
  • வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன் மாநகராட்சி, நகராட்சிகளில் வெள்ள அபாய பகுதிகளில் பணிகளை முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
  • நாடாளுமன்ற தேர்தலின்போது ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் நயினாருக்காக பணப்பட்டுவாடா செய்ய 20 கிலோ தங்க கட்டிகள் விற்றது அம்பலம்
  • சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி மீண்டும் சென்னை ஓபன்: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
  • படத்தின் வெளிநாட்டு உரிமை தருவதாக கூறி ரூ.1.90 கோடி மோசடி செய்ததாக நடிகர் நிவின் பாலி மீது புகார்: போலீசார் வழக்குப்பதிவு
  • மிசோரமில் தஞ்சமடைந்த 3000 மியான்மர் அகதிகள் சொந்த கிராமங்களுக்கு திரும்பினர்

You Might Also Like

நமது அடையாளம், கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்க கூடாது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

June 23, 2025

கோவை- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் கைவிடப்பட்ட குதிரைகள்

June 25, 2025

பொறியியல் படிப்புகளுக்கு நாளை கலந்தாய்வு தொடக்கம்!

July 6, 2025

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 43,000 கனஅடியாக குறைந்தது

July 2, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?