Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: பாசன நீர் பைப் அமைத்ததில் முன்விரோதம்; வக்கீல் மீது மண் வெட்டியால் தாக்குதல்: வக்கீல் மீது மண் வெட்டியால் தாக்குதல்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

பாசன நீர் பைப் அமைத்ததில் முன்விரோதம்; வக்கீல் மீது மண் வெட்டியால் தாக்குதல்: வக்கீல் மீது மண் வெட்டியால் தாக்குதல்

EDITOR

தாராபுரம்: பாசன நீர் பைப் அமைத்ததில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வக்கீல் மீது மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் தாராபுரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வக்கீல் சங்க மாஜி செயலாளர் ராஜகோபால் (35). இவரது அலுவலகம் கச்சேரி சாலையில் உள்ளது. இவரது விவசாய தோட்டம் மூலனூர் அடுத்துள்ள மொங்கநல்லாம்பாளையத்தில் உள்ளது. அங்கு பாசன நீர் பைப் அமைத்துள்ளது தொடர்பாக இவருக்கும், இவரது சித்தப்பாவும், முன்னாள் ஊராட்சி தலைவருமான துரைசாமி என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், நேற்று துரைசாமி, ராஜகோபாலின் பைப் லைனை துண்டித்துள்ளார்.

தகவல் அறிந்ததும் ராஜகோபால் நேற்றிரவு காரில் புறப்பட்டார். வழியில் காரை மறித்து கண்ணாடியை மண்வெட்டியால் அடித்து நொறுக்கி ராஜகோபாலையும் துரைசாமி தாக்கினார். இதில் காயம் அடைந்த ராஜகோபால் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். சம்பவம் அறிந்ததும் மூத்த வழக்கறிஞர் எஸ்.கே.கார்வேந்தன் தலைமையில் 50 வக்கீல்கள் அங்கு குவிந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து இரவு 10 மணிக்கு தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் வழக்கறிஞர் சங்க கட்டிடத்தில் சங்கத்தின் அவசர கூட்டம் சங்கத் தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் நடந்தது.

இதில் வழக்கறிஞர் ராஜகோபாலை தாக்கிய ஊராட்சி தலைவர் துரைசாமி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரம் வழக்கறிஞர்கள் 2 நாட்கள் அதாவது இன்றும் (16ம் தேதி), நாளையும் (17ம் தேதி) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து மூலனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post பாசன நீர் பைப் அமைத்ததில் முன்விரோதம்; வக்கீல் மீது மண் வெட்டியால் தாக்குதல்: வக்கீல் மீது மண் வெட்டியால் தாக்குதல் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • “கூட்டணி ஆட்சிதான்…” – பழனிசாமி பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் ரியாக்‌ஷன்
  • போட்டோஷூட்டுக்காக சங்கமித்த இந்திய கிரிக்கெட் அணி, மான்செஸ்டர் யுனைடெட்!
  • வாகன வசூலுக்கான மறு ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை கட்டணமின்றி பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்: மாநகராட்சி அறிவிப்பு
  • இந்தோனேசியாவில் சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து!
  • புதுவை கடற்கரை ரோந்து பணியில் முதல்முறையாக ரோபோ!
  • கர்நாடகா: பெண்கள் உட்பட 100 உடல்களை புதைத்ததாக கூறும் நபர் – எழும் கேள்விகள் என்ன?

You Might Also Like

திருவாரூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த புகார் – மூவர் கைது

July 18, 2025

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 30ல் தொடக்கம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு

July 16, 2025

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

June 25, 2025

கல்வியின் மூலம் சாதித்த திருநங்கை ஜென்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

June 22, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?