
பிஹார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. பிஹாரில் ஜன் சுராஜ் வேட்பாளர்கள் 3 பேர் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். இதற்கு பாஜகவின் அச்சுறுத்தலே காரணம் என ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார். பிரசாந்த் கிஷோர் கூறுவதுபோல், பிஹார் தேர்தல் களத்தில் ‘மிரட்டல்’ அரசியல்? தலை தூக்கியுள்ளதா? என்பது குறித்து சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

