
ராமேசுவரம்: பாம்பன் மீனவர் வலையில் அரிய வகையான கூறல் மீன் இரண்டு சிக்கின. 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் ரூ.1.65 லட்சத்துக்கு விற்பனையாகின. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 90-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று கரை திரும்பினர்.
இதில் மீனவர் ஒருவரின் வலையில் 22 மற்றும் 24 கிலோ எடையிலான 2 கூறல் மீன்கள் சிக்கியிருந்தது தெரியவந்தது. மொத்தம் 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் கிலோ ரூ.3,600 வீதம் ரூ.1,65,600-க்கு ஏலத்தில் விலைபோயின.

