
புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து டெல்லியில் நேற்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசும்போது “ஜிஎஸ்டி குறைப்பால் உணவு பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் எலக்ட்ரானிக் பொருள் விற்பனை சாதனை படைத்துள்ளது” என்றார்.

