
தடாகக் கட்சி தலைவர் மீது ‘டெல்லி மக்கள்’ அவ்வளவு திருப்தி இல்லாமல் இருக்கிறார்களாம். மாளிகைக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றபோதும் கடந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் தடாகக் கட்சியை பேசும்படியான இடத்தில் தடபுடலாய் வைத்திருந் தாராம் ‘பிரதர் மவுன்ட்’ தலைவர்.
ஆனால், இப்போது மாளிகைக் கட்சியுடன் கூட்டணி அமைந்துவிட்ட நிலையில் புதுத் தெம்போடு நிற்க வேண்டிய கட்சி, அதற்கு மாறாக பழைய தெம்பையும் இழந்து சுரத்தில்லாமல் இருக்கிறதாம். ஏன் இந்தத் தேக்கம் என மத்திய தலைமை விசாரணை நடத்திய போது, “இப்போது ஜில்லா அளவில் பொறுப்பில் இருப்பவர்களில் பெரும்பகுதியினர் அவரால் நியமிக்கப்பட்டவர்கள். அதனால் எங்களுக்கு போதிய ஒத்துழைப்பு இல்லை” என்று ஒரு காரணத்தைச் சொன்னதாம் சிட்டிங் தலைவர் தரப்பு.

