Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: பெரிய சமூகத்தை புறக்கணிப்பதா? தவெகவிலிருந்து எழுத்தாளர் விலகல்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

பெரிய சமூகத்தை புறக்கணிப்பதா? தவெகவிலிருந்து எழுத்தாளர் விலகல்

EDITOR

தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சமூகத்தை சார்ந்தவருக்கு மாவட்டச் செயலாளர் பதவியை வழங்காததால், அவர்களின் ஒரு வாக்குகளை கூட உங்களால் பெற இயலாமல் போகும் எனக்கூறி தூத்துக்குடி சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான காந்திமதிநாதன் தவெகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

என் தந்தையின் அரசியலுக்கு பின்னர் 21 ஆண்டுகள் எந்த அரசியல் கட்சியிலும் என்னை இணைத்து கொள்ளாமல் தனித்து இயங்கி பல்வேறு பொது நல வழக்குகளை தாக்கல் செய்து பல வழக்குகளில் சிறப்பான தீர்வை பெற்றும், நான்கு நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளேன். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நான் தவெக கட்சியில் என்னை இணைத்து கொண்டேன். கட்சிக்காகவும் விஜயை இணைய தளத்தில் மிரட்டியவர் மீதும் நீதிமன்றம் மூலம் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தேன்.

இன்னும் சில வழக்குகளையும் நடத்தி வருகிறேன். அரசியலில் பிழைப்போர்க்கு அறமே கூற்றாகும். ஆனால் புறம் பேசியே பொய் முகம் கொண்ட வாய்மையற்றவர்களின் மத்தியில் சிக்கிக் கொண்டதை இப்போது உணருகிறேன். அதனால் மனமும், உடலும் சோர்வடையக்கூடிய வகையில் எனது தவெக அரசியல் பயணம் அமைந்து விட்டது.இதனால் என் எழுத்து பணி, என் சமூகப் பணி, பொதுநல வழக்குகளில் கவனம் செலுத்திட விளைந்துள்ளேன். அரசியல் நயவஞ்சகர்களின் சூதாட்ட களம் என்பதை அறிந்து என் அரசியல் பயணத்தை முடித்து கொள்கிறேன்.

தென் மாவட்டங்களில் மிகப்பெரிய ஒரு சமூகத்தை சார்ந்தவன் மட்டுமல்ல. அந்த சமூகத்திற்கு இந்த இயக்கத்தில் ஒரு மரியாதையை தருவார்கள் என்று இலவு காத்த கிளியாகத்தான் காத்துக் கிடந்தேன். என் விலகளுக்கு பிறகாவது என் சமூகத்தைச் சேர்ந்த ஏதாவது ஒரு தம்பிக்கு அந்த சமூகத்தை கௌரவப்படுத்தும் வகையில் மாவட்டச் செயலாளர் பதவியை வழங்கி இயக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஒரு வாக்குகளை கூட தென் மாவட்டங்களில் உங்களால் பெற இயலாமல் போகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பெரிய சமூகத்தை புறக்கணிப்பதா? தவெகவிலிருந்து எழுத்தாளர் விலகல் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • 30 நாளில் 2.50 கோடி உறுப்பினர்களை சேர்க்க திமுக மாவட்ட செயலாளர்களிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தகவல்
  • பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜேக் கூட்டமைப்பினர் மறியல் போராட்டம்
  • சாலை, குடிநீர் பணிகளை மழைக்கு முன்பு முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
  • மே.இ.தீவுகள் அணி வீரர்கள் மீது லாரா குற்றச்சாட்டு
  • 4-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும்: சொல்கிறார் இர்பான் பதான்

You Might Also Like

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் நடைபெறும் மலையேற்றப் பயிற்சி: டிரெக்கிங் தமிழ்நாடு திட்டத்தில் முன்பதிவு

June 25, 2025

ஆண்களை நம்பி இருக்காமல் பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேச்சு

June 24, 2025

கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?.. அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி

June 20, 2025

ஜூலை 5-ம் தேதி ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போலீசார் வாகன தணிக்கை

July 1, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?